தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அக்கட்சி மிகப்பெரிய பொறுப்பு ஒன்றினை வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். பின்னர் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் தற்போது அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச் செயலாளர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது திமுக கட்சியின் துணை பொது செயலாளராக இருந்த பொன்முடி சமீபத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவரின் கட்சி பதவியை திமுக பறித்தது. அதே சமயத்தில் தொடர்ந்து அவர் அமைச்சராக நீடித்து வரும் நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி திருச்சி சிவாவுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது உதயநிதியை துணைப் பொதுச்செயலாளராக திமுக மேலிடம் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அமைச்சரவையில் மாற்றம் வர இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்க இருப்பதாக வெளிவந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.