கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீத்தா குட்டை பகுதியில் ராம்குமார் (26) என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா (19) என்ற பெண்ணுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இதில் சுஜாதா திருமணத்திற்கு முன்பாக கணேசன் என்பவரை காதலித்துள்ளார். இதுகுறித்து ராம்குமாருக்கு தெரிய வரவே. அவர் தன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் கணவன் மனைவி இருவரையும் அழைத்தது பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராம்குமார் வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய சடலத்தை மீட்டு காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சுஜாதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது தன்னுடைய கள்ளக்காதலுக்கு கணவன் இடையூறாக இருந்ததால் அவரை தன்னுடைய கள்ளக்காதலன் கணேசன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரின் உதவியுடன் கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதாவது திருமணத்திற்கு முன்பே சுஜாதா கணேசனை காதலித்து வந்த நிலையில் இந்த காதல் விவகாரம் சுஜாதாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. ஆனால் அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் ராம்குமாருடன் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அவரால் காதலை  மறக்க முடியாததால் தொடர்ந்து கணேசனுடன் உறவிலிருந்து உள்ளார். இந்த விவகாரம் தன் கணவனுக்கு தெரிய வந்து பிரச்சனை செய்ததால் அவரை கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.