தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருடைய வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த ஆவணப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்தது. இது பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. நடிகை நயன்தாரா அந்த ஆணவப் படத்தில் தன்னுடைய முன்னாள் காதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

இந்நிலையில் நயன்தாரா தி பியாண்ட் ஃபேரி டேல் டாக்குமெண்டரியை தற்போது பிரபல எழுத்தாளர் ஷோபா டே கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது அந்த ஆணவப்படத்தில் ரசிக்கும்படியாக எதுவுமே இல்லை என்று கூறிய அவர் இது திருமணத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் போக்கு என்று கூறியுள்ளார். மேலும் இவருடைய பதிவுக்கு பலரும் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் சிலர் அது நடிகை நயன்தாராவின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறி வருகிறார்கள்.