கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகாவைச் சேர்ந்தவர் நீக்ஷா.  இவருக்கும் விஷால் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று நீக்ஷா தன்னுடைய கணவருடன் ஹோஸ்மாரு பாலத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது, திடீரென்று நாய் ஒன்று வண்டியின் முன்பாக சாலையின் குறுக்கே வந்தது. அதை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நீக்ஷா தலையில் பலத்த காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் கணவர் விஷால் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.