
சேலம் மாவட்டம் சூரமங்கலம் முல்லை நகர் சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான பிரதீப் குமார் என்பவருக்கு பேபி ஷாலினி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் தரண் என்ற மகனும் உள்ளார். இந்த நிலையில் கடந்து சில மாதங்களாக கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் இதனால் விரக்தி அடைந்த பேபி ஷாலினி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதீப் குமார் மனைவியை மீட்டு காரில் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பேபி ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப்பிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான நான்கு ஆண்டுகளில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.