கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பேரளையூர் என்ற கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி தனலட்சுமி என்பவருடைய மகன் பன்னீர்செல்வம். இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், சிவகுமார் என்ற மகனும், சிவரஞ்சனி மற்றும் சிவசத்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர் செல்வமும் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாரும் உயிரிழந்து விட்ட நிலையில் சிவரஞ்சனி திருமணம் ஆகி கருவேப்பலங்குறிச்சியில் வசித்து வருகின்றார். சிவ சத்தியா மட்டும் திருமணம் ஆகாத நிலையில் தன்னுடைய தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

தனது சகோதரர் சிவகுமார் உயிரிழந்த நாளிலிருந்து சிவசக்தி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களாக தனது பாட்டியிடம் எனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது பாட்டியுடன் அவர் தகராறில் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சிவ சத்யா பாட்டி என்று கூட பாராமல் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தனலட்சுமியை  தாக்கினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவ சத்யாவிடம்  விசாரணை நடத்தினர். அப்போது நான் தான் பாட்டியை கொன்றேன். போலீசார் யாராவது வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார் . இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்யாமல் வேறு வழி இன்றி வீட்டிலேயே காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.