சேலம் மாவட்டம் வளையமாதேவி எம்பிசி நகர் பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத் (25) என்ற மகன் இருக்கிறார். இவர் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு 20 வயது இருக்கும். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை பரத் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் பரத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பரத் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த இளம் பெண் நடந்த சம்பவம் தொடர்பாக ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.