அக்டோபர் 30ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி பயணிக்க விருப்பமுள்ளவர்கள் ஜூலை 1 இன்று புக்கிங் செய்து கொள்ளலாம். அக்டோபர் 30ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் ஜூலை 2 நாளை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

80 சதவீத டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் புக்கிங் ஆகின்றன. இதனால் இணையதளத்தில் டெக்னிக்கல் கோளாறு ஏற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது மற்றும் கூடுதல் பெட்டிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.