தீபாவளி என்பது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு வசதியாக வருடம் தோறும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது . அப்படி இந்த வருடத்திற்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை முதலே தொடங்கியது. ஆனால் முன்பதிவான சில நிமிடங்களிலேயே முடிந்து விட்டது.

அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அதாவது அக்டோபர் 29ஆம் தேதி புறப்படும் ரயிலின் டிக்கெட்  விற்பனை தீர்ந்துள்ளது. சென்னையிலிருந்து திருநெல்வேலி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய ரயில்களின் முன்பதிவு நடைபெற்ற நிலையில் சற்று நேரத்தில் டிக்கெட் விற்று தீர்ந்தது. அக்டோபர் 30-ம் தேதி இயங்கும் ரயில்களுக்கு முன்பதிவு நாளையும், அக்டோபர் 31ஆம் தேதி செல்லும் ரயில்களுக்கு நாளை மறுநாள் அதாவது புதன்கிழமையும் முன்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.