திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் முதல் மனைவியை உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன் பிறகு அவர் அடுத்தடுத்து மூன்று பேரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் விழ வைத்துள்ளார்.

அதன் பிறகு மகளை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அடுத்த தள்ளப்பாடி கிராமத்தில் வைத்து இருவரையும் பிடித்தனர். அதன் பிறகு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.