
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பக்கத்தில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது. அப்போது பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த எஸ்வந்த்பூர் ஹவுரா ரயில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்தரயிலும் விபத்துக்குள்ளானது. மேலும் இதில் சரக்கு ரயில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இதுவரை 233 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மற்றும் 900-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து, கடந்த பத்தாண்டுகளில் நடந்த மிகப்பெரிய விபத்தாகும். 2012 மே 12ல் நடந்த ஹம்பி எக்ஸ்பிரஸ் விபத்தில் 150 பேரும், 2014 மே 26ல் கோரக்டாம் விபத்தில் 25 பேரும், நவம்பர் 20, 2016ல் இந்தூர் – பாட்னா ரயில் தடம் புரண்டதில் 25 பேரும், ஆகஸ்ட் 18, 2017ல் உத்கல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 23 பேரும் உயிரிழந்தனர். நேற்றைய ரயில் விபத்து சம்பவத்தில் 233 பேரும் உயிரிழந்தனர்.