பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆக்சிஸ் வங்கி கிளை நேற்று வழக்கம் போல திறக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது மர்ம கும்ப கும்பல் ஒன்று வங்கிக்குள் திடீரென புகுந்தது. அவர்களின் கைகளில் துப்பாக்கிகள் இருந்தன. இதனைப் பார்த்து வங்கியில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்ற நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நகை மற்றும் பணம் இருக்கும் பெட்டக அறைக்குள் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து பெட்டக அறையில் இருந்த 25 லட்சத்தை துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மர்ம கும்ப கும்பலை வலை வீசி தேடி வருகிறார்கள். அஜித்தின் துணிவு பட பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.