கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் உன்னிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மினி (53) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சம்பவ நாளில் வீட்டின் முன்பு என்று துணி துவைத்து கொண்டிருந்தார். அந்த இடத்தின் அருகே ஒரு பலாமரம் இருந்த நிலையில் திடீரென மரத்திலிருந்து ஒரு பலாப்பழம் கீழே விழுந்தது. இது அவருடைய தலையில் விழுந்த நிலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக உறவினர்கள் மினியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோழிக்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.