திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் கார்த்தி-லீலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் தினேஷ்குமார்(13) 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அவர் பள்ளிக்கு செல்லாமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று விட்டு வீட்டில் ஓய்வெடுத்துள்ளான்.

இந்த நிலையில் சம்பவ நாளில் தினேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் அனுப்பர்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.