
கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசிரிப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் சிவக்குமாரின் மகன் அமர்நாத் (வயது 15), தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை இரும்பு கொக்கியால் எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அந்த கொக்கி அருகே சென்று கொண்டிருந்த மின்சார கம்பியில் பட்டது.
இதனால் மின்சாரம் உடனடியாக பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அமர்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அமர்நாத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.