
தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான மறைந்த விஜயகாந்த் 72வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அக்கட்சியின் நிர்வாகிகள் அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்கிறார்கள். அதன் பிறகு இன்று சென்னை தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் முழு உருவ சிலை திறக்கப்பட்டது.
இந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவின்போது தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். அதாவது தேமுதிக கட்சி அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும் என்றார். மேலும் புதிதாக ஒரு youtube சேனல் ஆரம்பிக்கப்படும் என்றும் விஜயகாந்த் பிறந்த தினம் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும் என்றும் தெரிவித்தார்.