தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்த சுசித்ரா சுசி லீக்ஸ் மூலம் கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தார். இவர் சமீபத்தில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இந்நிலையில் சுசித்ரா தற்போது நடிகர் விஜய் பற்றி பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஜயுடன் அவருடைய மனைவி சங்கீதா மீண்டும் சேர வேண்டும். ஒரு சின்ன சண்டையால் பிரிந்த குடும்பம் ஈகோவினால் சேராமல் இருக்கிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு த்ரிஷா போன்ற ஒட்டுண்ணிகள் நுழைய முயல்கிறார்கள்.

அவர் விஜயுடன் லிப்ட்டில் தனியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட போதே திரிஷா விஜயை அடைய முயல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் விஜய் அரசியலில் நுழைந்ததால் திரிஷாவும் அரசியலில் வர விரும்புகிறார். எம்ஜிஆருக்கு ஜெயலலிதா ஒரு ஒட்டுண்ணிதான். ஏனெனில் ஜெயலலிதா எம்ஜிஆரிடமிருந்து அரசியல் நுணுக்கங்களை கற்றுக் கொண்ட பிறகு அவரை அரசியலில் இருந்து ஒதுக்கிவிட்டார். இதே போன்று  த்ரிஷாவும் விஜய்க்கு செய்ய நினைக்கிறார். எனவே விஜய் த்ரிஷாவை விட்டு விலகி அவருடைய மனைவியுடன் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் விஜய் மற்றும் த்ரிஷாவை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உடன் சுசித்ரா ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.