18 ஆவது ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல நகரங்களிலும் நடந்து வருகிறது. இதில்  20வது லீக் ஆட்டத்தில் மும்பை – பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி, பில் சால்ட் களமிறங்கினார்கள், இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். விராட் மற்றும் படிக்கல் ஜோடி சேர்ந்து சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 209 ரன்கள் எடுத்தது.

இதன் மூலமாக  மும்பைக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் தன்னைத்தானே இம்பேக்ட் பிளேயராக ரோகித் சர்மா அறிவித்துக் கொண்டார். பிளேயர் உள்ளே வரும்பொழுது நடுவர் கொடுக்க வேண்டிய சிக்னலை ரோஹித் சர்மா கொடுத்துள்ளார். இதனை அடுத்து ரோகித் சர்மாவின் இந்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.