நெதர்லாந்து நாட்டில் நரைன் மெல்கும்ஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விமானி. இவர் பயிற்சி பெறுவதற்காக ஒரு சிறிய தனி விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தார். இவர் 2 பேர் அமரக்கூடிய 330 எல்.எக்ஸ் ரக சிறிய விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென விமானத்தின் மேல் கதவு திறந்தது. இதனால் பலத்த காற்று அவரின் முகத்தில் வீசிய நிலையில் அவரால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இருப்பினும் ஆபத்தான சூழ்நிலையில் எப்படி செல்ல வேண்டும் என்ற அறிவுரையை நினைவுபடுத்தி விபத்து நடைபெறாதவாறு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார். அதன்பிறகு விமானத்தில் பறப்பதற்கு முன்பாக அதில் இருக்கும் பிரச்சினைகளை கவனிக்காமல் பயணித்தது தவறு என்று கூறிய அவர் இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முன்னதாகவே தெரிவிக்காததற்கு வருத்தமும் தெரிவித்துள்ளார்.