டெல்லியில் இருந்து நேற்று மாலை மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்றது. இந்த விமானத்தில் மொத்தம் 176 பேர் பயணித்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது கலீல் கான் (38) என்ற பயணி கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கழிவறையில் இருந்து புகை வந்துள்ளது.

இதைப் பார்த்து சக பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் கலீல் அகமதுவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கழிவறையில் சிகரெட் பிடித்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து விமானம் மும்பைக்கு வந்தது. அதன்பிறகு கலீல் அகமது ‌ செய்த காரியம் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்‌. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.