அமெரிக் காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கிறிஸ்டோபர் லூயிஸ் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் இளம்பெண் ஒருவரிடம் பேல் பூரி வாங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதை வாங்கி அவர் நன்றி தங்கச்சி என்று கூறியுள்ளார். தங்கச்சி சரியா? என்று கேட்கிறார் அதற்கு அந்த பெண்ணும் ஆம் என்று கூறுகிறார். இதனையடுத்து நன்றி தங்கச்சி என்று கூறுகிறார் .

அதற்கு அந்த பெண்ணும் நன்றி அண்ணா என்று கூறுகிறார். மேலும் தான் கூறியது சரியா என்று கேட்கையில் அந்த பெண் சரி என்கிறார். மேலும் இதனுடைய பெயர் என்ன என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் பேல் பூரி என்று கூறுகிறார். அந்த பெண்ணின் பெயரை கேட்கும் பொழுது அவர் வெண்ணிலா என்று பதிலளிக்கிறார். “வெண்ணிலா பேல் பூரி” என்று அதை சாப்பிடுகிறார் அந்த யூடியூபர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.