சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார். இதானால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் , போலீசார் சிறுமியை செல்போன் எண்ணை வைத்து தேடியபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் என்ற இடத்தில அவர் இருப்பது தெரியவந்தது. அவரை மீட்ட போலீசார் வருடம் விசாரணை நடைதியத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பேஸ்புக் மூலம் பழக்கமான வினோத் என்ற நபரை நம்பி சென்ற சிறுமியை திருவண்ணாமலையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வினோத் அவருடைய நண்பர்களான ஜீவா (21), அஜித் (21) ஆகியோரை வைத்து தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஜீவா, அஜித் ஆகியோரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த போலீசார் வினோத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.