சென்னை எம் ஆர் சி நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர், பிரபல நடிகை நயன்தாரா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த குடியிருப்பில் பங்குச்சந்தை வர்த்தகரான கோபாலகிருஷ்ணன் என்பவரும் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய லாக்கரின் சாவியை தேடிய போது அது தொலைந்து போய் உள்ளது.

அந்த லாக்கரில் தங்கம், வெள்ளி, பணம் போன்றவை இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவரிடம் 10 வருடங்களாக அவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த சரவணன் என்பவர் திடீரென்று வேலையை விட்டு விலகி இருக்கிறார். இதனால் சந்தேகம் ஏற்பட்ட அவருக்கு லாக்கரை உடைத்து பார்த்தபோது அதிலிருந்து 250 பவுன் தங்கம், 10 கிலோ வெள்ளி, பணம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் டிரைவர் சரவணனை கைது செய்துள்ளனர்.