வேலூர் மாவட்டம் தேவகாரன்பட்டியில் ஜெயலட்சுமி(75) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 22 ம் தேதி ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 4 மர்ம நபர்கள் ஜெயலட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து வயதானவர் என்று கூட பார்க்காமல் அவரை கத்தியால் தாக்கியுள்ளனர். அதன் பிறகு ஜெயலட்சுமி அணிந்திருந்த தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பாப்பாத்திகுட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த எழிலரசன் மற்றும் இரண்டு சிறுவர்கள் ஆகியோர் இணைந்து மூதாட்டியின் வீட்டில் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் தமிழ்ச்செல்வன் உட்பட 4 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.