மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கர் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கருத்தரங்கு நடைபெறும் நான்காவது மாடியில் உள்ள அறையில் பெண் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அதே மருத்துவமனையில் உள்ள மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயிலும் மாணவர் என்பது தெரிய வந்தது. அவருடைய உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. இதனை தொடர்ந்து அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் தற்கொலை செய்யவில்லை என்றும் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்டு தான் உயிரிழந்தார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சேவைகள் மட்டுமே ஆகஸ்ட் 12ஆம் தேதி இன்று நிறுத்தப்படும் என்று குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று அனைத்து மருத்துவமனைகளிலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சேவைகள் இடைநிறுத்தப்படும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.