தென் கொரியா வட கொரியாவின் எச்சரிக்கையை  மீறி அமெரிக்க படைகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக நடத்தி வருகிறது. இதனால் தீபகற்பத்தில் பதட்டமான சூழலே நிலவி வருகிறது.

இந்நிலையில் முக்கிய ஆயுத தொழிற்சாலையில் வடகொரியா அதிபர் கிம்  ஜாங் உன்  ஆய்வு மேற்கொண்டார். ஏவுகணை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்த அவர் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கியமானதாக கருதப்படும் ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க அதிரடி உத்தரவிட்டுள்ளார்.