ராஜஸ்தானில் பைசா வடா என்னும் பகுதியில் இராணுவ வீரர் அஜய் சிங் நருகா வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2ஆண்டுகள் ஆன நிலையில் இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த அஜய் சிங் நருகா துப்பாக்கி சூடு சண்டைக்கு முன்பாக தன் குடும்பத்தினரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் எனக்கு ஊருக்கு வர அனுமதி கிடைத்துள்ளதால் நான் 20 ம் தேதி வருகிறேன் என்று குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவர் வருவார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால் அவருடைய சடலம் மட்டுமே நேற்றிரவு வீட்டிற்கு வந்தது. மேலும்,ஆசையாக குடும்பத்தினரை பார்க்க வருவதாக கூறிய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்த நிலையில்  சடலமாக வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.