
சென்னை மாவட்டம் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீனத். இவரது மகன் ஜமால். இந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது. நேற்று இரவு ஜமால் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கீதா வளர்த்து வரும் நாய் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஜமாலின் காலில் கிடைத்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜமாலியின் தாய் ஜீனத் தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவுடன் கீதாவை பார்த்து நாயமயை கட்டி போடுங்கள் என கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கீதாவும், அவரது மகன் விக்கியும் இணைந்து ஜீனத்தை தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த ஜீனத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.