தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்க முதல்வர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசம் ஜூலை 3 நாளையுடன் நிறைவடைகிறது. 2024-25 ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 21ஆம் தேதி திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் விவரங்களை ஜூன் 21 முதல் 26 வரை பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.