அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் ராட்டூர் என்னும் பகுதியில் பூஷன் குமார் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவருடைய வீட்டில் இவரின் தாய்,சகோதரர்,அண்ணி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும் இவரது சகோதரருக்கும் நில பிரச்சனை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நேற்று இரவு அவர்கள் இருவருக்கும் பயங்கரமான சண்டை நடந்தது.

அப்போது கோபத்தில் பூஷன் குமார் கத்தியால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொடூரமாக குத்தி கொலை செய்தார். இதைத்தொடர்ந்து அனைவரது உடலையும் எரிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து அம்பாலா  காவல் நிலையத்திற்கு தெரிய வந்தது. அந்தத் தகவலின்படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய பூஷன் குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.