
கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தம்பட்டி என்னும் பகுதியில் வெங்கடேசன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் வெங்கடேசன் சென்றார். அப்போது அவர்கள் திருவிக நகர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியது.
இதில் 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் கீழே விழுந்த வெங்கடேசன் தலையில் பலமான அடி ஏற்பட்டது. அதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சொக்கலிங்கம் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.