
இலங்கை கடற்படையால் பிடிபட்ட மீனவர்களை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படுவதால் மீனவ மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், இதனால் மீனவ கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.