தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த கூட்டணி சற்று வருத்தத்தை தருவதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். அதன் பிறகு அதிமுகவை காப்பாற்ற வேண்டிய சூழல் இருப்பதால் இஸ்லாமியர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன் நிர்பந்தத்தின் காரணமாகத்தான் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக பேசினார். இந்நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகிகளின் இந்த பேச்சுக்கு தற்போது திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, குணசேகரன் அண்ணா உங்களுக்குத் தான் இந்த பதிவு. எதுவுமே கவலைப்படுவதாக இல்லை. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததில் பிரச்சனை என்கிறீர்கள். நீங்கள் பேசியது தவறு. நான் உங்களிடம் ஒன்று மட்டும் கேட்கிறேன். நீங்கள் மூன்று முறை வெற்றி பெற்ற அந்த வார்டில் இன்று எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள்.

நீங்க 64 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் அதே வார்டில் பாஜக 484 வாக்குகள் வாங்கியுள்ளது. நீங்கள் தோற்றுதற்கு பாஜகவை பற்றி பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் உங்களுக்கு கிடையாது. இது நல்லது இல்லை. உங்கள் தோற்றதற்கு பாஜகவா காரணம் அண்ணா சொல்லுங்கள். மேலும் நீங்கள் மூன்று முறை வெற்றிபெற்ற இடத்தில் தோல்வி அடைந்தீர்கள் என்றால் அதற்கு பாஜக இல்லாததுதான் காரணம் என்று கூறினார்.