மும்பையில் மரைன் டிரைவ் கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இங்கு சுவாதி என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவருடைய கைப்பை கடலில் விழுந்தது. இதனை எடுப்பதற்காக அந்த பெண் கடலுக்குள் சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி அன்மோல் தஹிபேல், கிரண் தாக்கரே ஆகிய இரு காவலர்கள் அங்கு வந்தனர். அவர்கள் யோசிக்காமல் தங்கள் உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் உடனடியாக கடலுக்குள் குதித்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். அதன் பின் சுவாதி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் காவலர்களை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Police (@mumbaipolice)