குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பால் என்பதை அதிகம் விரும்புகின்றனர். இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பால் குடிப்பதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். இந்தப் பாலில் கலப்படம் செய்யப்பட்ட மற்றும் தரம் குறைந்த பாலை எப்படி கண்டறிவது என்பது இதில் பார்க்கலாம். நாம் வாங்கக்கூடிய பாலின் தரத்தை வீட்டிலேயே சில பரிசோதனைகளை செய்து சரி பார்க்கலாம். அதற்கு ஒரு துளி பாலை எடுத்து பாலிஷ் ஆன சாய்வான தரையில் விட வேண்டும்.

அப்படி விடும்போது தூய்மையான பாலாக இருந்தால் பால் துளி அதே இடத்தில் இருக்கும் அல்லது மெதுவாக வடியும். அதுவே தண்ணீர் கலந்த பாலாக இருந்தால் வேகமாக கீழே வடிந்து செல்லும். ஏனென்றால் கலப்படமற்ற பாலில் பிசுபிசுப்பும் இழுவிசையும் அதிகமாக தான் இருக்கும்.

அடுத்ததாக கொஞ்சம் பாலை எடுத்து கொதிக்க விட்டு ஆற வைத்து அயோடின் கரைசலை அதில் ஊற்ற வேண்டும். கலப்படமற்ற பாலாக இருந்தால் நிறம் எதுவும் மாறாது. அல்லது லேசாக மஞ்சள் நிறத்தில் மாறும். மாவு பண்டம் ஏதாவது கலக்கப்பட்டு இருந்தால் பாலின் நிறம் நீளமாக மாறிவிடும்.

கண்ணாடி கிளாஸில் 5 மில்லி பாலை எடுத்து அதே அளவு தண்ணீரை பாலில் சேர்க்க வேண்டும். இந்த கலவையை நன்றாக குலுக்க வேண்டும். பாலில் எந்த ஒரு கலப்படமும் இல்லை என்றால் நுரை எதுவும் வராது அல்லது லேசாக வரும்.

டிடர்ஜென்ட் கலக்கப்பட்டு இருந்தால் பாலில் இருந்து நுரை பொங்கி வரும். இப்படி பாலில் பல பொருட்கள் கலப்படம் செய்கிறார்கள். இதனை நாம் கண்டறிந்து கொள்ளலாம்.