கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் என்ற பகுதி உள்ளது. இங்கு பேபி (74) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தன் மகனுடன் வசித்து வந்தார்‌. இவர் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்துகள் சாப்பிட்டு வருகின்றார். இந்நிலையில் சம்பவ நாளில் பேபியின் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதை கண்காணித்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பேபி அங்கு பேச்சு மூச்சின்றி மயங்க நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் பேபியின் மகன் ஆண்ட்ரியோ எடிசன் என்பவருக்கு தகவலை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவரது மகன் அங்கு வந்து பேபியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பேபியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளனர். மேலும் பேபியின் மகன் காவல்துறையினரிடம் இதுபற்றி புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.