விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(32). இவர் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை முனியசாமி திருச்சுழி நீதிமன்றத்திற்கு சென்று தனது கட்சிக்காரர்களுடன் மரத்தடியில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

அதே சமயம் அங்கு இடி, மின்னலுடன் காற்று வீசியது. அந்த நேரத்தில் மரத்தடியில் நின்று கொண்டிருந்த முனியசாமி மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு அருகில் நின்றிருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர்.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து  வழக்கு பதிவு செய்தது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.