நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18 நாளை, மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி வருவதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே ஊட்டியில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.