கரூர் மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்.  27 வயதான இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் தங்களுடைய புகைப்படங்களை பரிமாறி வந்துள்ளார்கள். இதனிடைய சிறுமியை பேசி மயக்கி விக்னேஷ் ஆபாச வீடியோ எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார். மேலும் பார்த்த உடனே அதை டெலிட் செய்து விடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

இதை நம்பி சிருமியும் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பியுள்ளார் . இதனை அடுத்து விக்னேஷ் அந்த சிறுமியை வீடியோ காட்டி மிரட்டி தனியாக ஒரு இடத்திற்கு வரவேண்டும் இல்லையென்றால் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். மேலும் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறினார் . அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை செய்து போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் கைது செய்துள்ளனர்.