
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காகுறிச்சி வடக்கு ராஜா குடியிருப்பு பகுதியில் கவுசல்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை அரசு டிப்ளமோ மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கடந்த 25-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கவுசல்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கௌசல்யாவை தேடி வந்தனர். அப்போது அந்த கிராமத்தில் இருக்கும் கிணற்றில் கௌசல்யாவின் சடலம் மிதந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கௌசல்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.