சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டியின் பி குழுவின் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் இப்ராஹிம் சாத்ரானின் விக்கெட்டை வீழ்த்தி தரமான சம்பவம் செய்தது ரசிகர்களை  மெய்சிலிர்க்கவைத்தது . கராச்சி தேசிய மைதானத்தில் நேற்று  நடந்த ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் 316 ரன்கள் எடுக்க முற்பட்ட போது, 10வது ஓவரில் சாத்ரான், ரபாடாவின் பந்தை நேராக அடித்து ஒரு சிக்ஸர் விளாசினார். ஆனால் அடுத்த ரபாடா பந்தில் , சாத்ரான் அதை ஆஃப்சைடு அடிக்க முயன்றபோது, பந்தை தவறவிட்டு ஸ்டம்பு  பறந்தது. வெறித்தனமாக களமிறங்கி வந்த ரபாடா, சாத்ரானுக்கு தீவிரமான ஷெண்ட்-ஆஃப் கொடுத்த வீடியோவை ஐ.சி.சி. இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது .

இப்ராஹிம் சாத்ரான் 17 ரன்களுக்கு வெளியேறிய பின், ஆப்கானிஸ்தான் 38/2 என்ற நிலைமையில் இருந்து இன்னும் விக்கெட்டுகளை இழந்தது. சீதிகுல்லா அடல் (16) மற்றும் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (0) ஆகியோரும் விரைவாக வெளியேற, 14.4 ஓவரில் ஆப்கானிஸ்தான் 50/4 என்ற நிலைக்கு சரிந்தது. பின்னர் ரஹ்மத் ஷா மற்றும் அஜ்மத்துல்லா ஒமர்சாய் இணைந்து 49 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஆனால், ஒமர்சாய் 18 ரன்களுக்கு வெளியேறியதால், 89/5 என்ற நிலை ஏற்பட்டது. ரஹ்மத் ஷாவுடன் மொகமது நபி இணைந்து 100 ரன்களை கடந்தபோதும், நபி 8 ரன்களுக்கு வெளியேறினார். இதனை தொடர்ந்து குல்பதின் நைப் 13 ரன்கள் சேர்த்தார். ரஷீத் கான் விரைவாக 18 ரன்கள் அடித்து வெளியேறினார்.

ரஹ்மத் ஷாவின் போராட்டம் வீணாகிப் போனது. 90 ரன்கள் சேர்த்த அவர், தனது சதத்திற்கான முயற்சியில் ரபாடாவின் பந்தை தடுக்க முயன்றபோது, பந்தானது விக்கெட் கீப்பர் கையுறையில் பதிந்து அவுட் ஆனதாக டிஆர்எஸ் உறுதி செய்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 208 ரன்களுக்கு ஒட்டுமொத்தமாக ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடக்கத்தை வெற்றிகரமாக தொடங்கியது. ரபாடா 8.3 ஓவரில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். லுங்கி என்‌கிடி (2/56) மற்றும் வியான் முல்டர் (2/36) ஆகியோரும் முக்கிய பங்கு வகித்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by ICC Hindi (@icchindiofficial)