திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுமே ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து ஊழியர்களும் சனிக்கிழமைகளில் வெள்ளை வேஷ்டி ,வெள்ளை சட்டை அணிய வேண்டும் .தினமும் அனைத்து ஆண்களும் தங்கள் நெற்றியில் திலகம், குங்குமம், விபூதி வைத்திருக்க வேண்டும்.

அதேபோல பெண் ஊழியர்கள் இந்து முறைப்படி புடவை, ரவிக்கை, சுடிதார் மேல் துப்பட்டாவுடன் அணிந்து நெற்றியில் திலகம், ஸ்டிக்கர் பொட்டுகளை வைக்க வேண்டும். அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக ஆடை கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும் .மேலும் தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது கோவிந்தா அல்லது ஓம் நமோ வெங்கடேசாய என்று கூறி பின்னர் பேச்சை தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.