
துருக்கியில் உள்ள இஸ்தான்பூல் அருகே புதன்கிழமையன்று ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, இஸ்தான்பூலிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் 6.2 மைல்கள் ஆழத்தில் பதிவாகியுள்ளது. இந்த அதிர்வுகள் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த CNN Türk தொலைக்காட்சியில் பயங்கர அனுபவமாக பதிவாகியுள்ளது. செய்தி வாசிப்பில் இருந்த மேல்வெளிக்கான முகம் மெல்டெம் போஸ்பேயோஃக்லு, நிலநடுக்கத்தால் பதற்றமடைந்த நிலையில் கமெரா அசைந்ததையும், அலறும் சத்தங்களையும் தாங்கி நிகழ்நிலை ஒளிபரப்பை தொடர்ந்திருப்பது பாராட்டை பெற்றுள்ளது.
🟥NEW SENSE
Breaking
…..
🇹🇷A strong earthquake with a magnitude of 6.2 struck Istanbul, according to Turkey’s Disaster and Emergency Management Presidency. The German Research Centre for Geosciences recorded it at 6.02 magnitude with a depth of 10 km. pic.twitter.com/WivT0ZnJ15— NEW SENSE (@Shyamsundarak6) April 23, 2025
நிலநடுக்கத்தின்போது டெஸ்க்கை பிடித்து பதற்றமடைந்த நிலையில் இருந்த மெல்டெம், விரைவாக மீள கட்டுப்பாட்டை பெற்றுக்கொண்டு நிலநடுக்க சம்பந்தமான தகவல்களை மக்கள் மத்தியில் பகிர்ந்தார். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், அவரது துணிவும், செய்தி வாசிப்புக்கேற்ப காட்டிய பளிச் செயற்பாடும் நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. தற்போது வரை எந்த உயிரிழப்பும் அல்லது பெருமளவு சேதமும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.