இந்தியாவில் சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் அருகே 12 வயது சிறுமியை சிறுவன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14 வயது சிறுவன் காது கேளாதவன். இவன் பக்கத்து வீட்டு 12 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளான்.

சிறுமியை ஏமாற்றி பண்ணைக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்று விட்டான். பின்னர் அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி நடந்து கொடுமையை தன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.