
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதால் அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய பங்கு சந்தை, மும்பை பங்கு சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்டர்நெட் பேங்கிங் மற்றும் ஏடிஎம் சேவைகள், மொபைல் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.