தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில்ராஜு தயாரித்துள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

ரசிகர்கள் ஆவலாக இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்கிறார். வாரிசு வெளியீட்டுக்கு பின் இப்பட அப்டேட் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், சென்னையில் இன்று படப்பிடிப்பு தொடங்கியதாக மனோபாலா ட்வீட் செய்துள்ளார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவர் லோகேஷ், விஜய் இருவரையும் சந்தித்ததாகவும், அதே எனர்ஜியில் விஜய் இருப்பதாகவும். படப்பிடிப்பு தூள் என்றும் நெகிழ்ந்துள்ளார்.