கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர்(23). இவர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சங்கர் தனது வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் சங்கர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சங்கர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.