தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கியவர் தான் வசந்தபாலன். இப்படி பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து வைத்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வசந்த பாலன், “தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் வருகைக்கு முன்பாக சாதி, தலித் மக்களை பற்றிய பார்வை வேறு ஆக இருந்தது.

வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். சிறுபான்மையினரை மூன்றாம் பாலினத்தவரை நாம் தவறாக காட்டி விடக்கூடாது என்று பா. ரஞ்சித் அவருடைய படங்களின் மூலமாக நமக்கு சுட்டிக்காட்டி உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.