
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே நேற்று பள்ளி சிறுவர்கள் அங்கிருந்த பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மின்கம்பி அறுந்து சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் சிறுவர்கள் இரண்டு பேரையும் மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் லோகேஷ் என்ற 8 வயது சிறுவனும் சப்தகிரி என்ற 11 வயது சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் சிறுவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். பம்ப் செட்டில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.