
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபருடன் பேசி வந்தார். இன்று மாணவியும், அந்த வாலிபரும் சேலம் பழையபேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் மாணவியை கத்தியால் குத்தி விட்டு அவரும் கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.